சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்கள் கவனத்திற்கு – 60,000 பேருக்கு அனுமதி! கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!

0
சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்கள் கவனத்திற்கு - 60,000 பேருக்கு அனுமதி! கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்கள் கவனத்திற்கு - 60,000 பேருக்கு அனுமதி! கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்கள் கவனத்திற்கு – 60,000 பேருக்கு அனுமதி! கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் திருக்கோயிலில் பக்தர்களுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தினசரி 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவசம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயில்:

உலக அளவில் உள்ள பிரசத்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலும் விளங்குகிறது. இத்தகு சிறப்புமிக்க கோவிலில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து வருவதால் சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏற்பட்ட மழை பாதிப்பு காரணமாக பக்தர்களுக்கு தரிசனம் மறுக்கப்பட்டது.

இந்தியாவில் கிடுகிடுவென உயரும் ஓமைக்ரான் பாதிப்பு – 153 பேருக்கு தொற்று உறுதி!

தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளதால் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதலில் தினசரி 25 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக உயர்த்தி தற்போது 50 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறாக கார்த்திகை மாத தொடக்கத்தில் சுவாமி ஐயப்பன் சாலை வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது பாரம்பரிய நீலிமலை பாதை வழியாக அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் பக்தர்கள் பம்பை நதியில் நீராடும் வகையிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

10 & 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை – மாநில அரசு வெளியீடு!

அதனை தொடர்ந்து சில நாட்களாக பெரும்பாலான பக்தர்கள் மாலை அணிவித்து தரிசனத்திற்கு வருவதால் கூடுதல் தளர்வுகள் அளித்து தேவசம் அமைச்சர் அறிவித்துள்ளார். அந்த வகையில் 60 ஆயிரம் பக்தர்கள் தினசரி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை பக்தர்கள் கொண்டு வரும் நெய் தேங்காய் அபிஷேகத்திற்கு உட்படுத்தப்படவில்லை. இது ஐயப்பன் பக்தர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி வந்தது. ஆனால் தற்போது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பக்தர்கள் கொண்டு வரும் நெய் தேங்காயை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை அபிஷேகம் செய்ய அனுமதி வழங்கியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!