இந்தியாவில் கிடுகிடுவென உயரும் ஓமைக்ரான் பாதிப்பு – 153 பேருக்கு தொற்று உறுதி!
ஓமைக்ரான் தொற்று பரவல் இந்தியாவில் அதிகமாகி வருகிறது. இன்றைய நிலவரப்படி 153 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு தீவிரமடைந்து வரும் ஓமைக்ரான் பாதிப்பால் இந்திய மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
ஓமைக்ரான் பரவல்:
உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் ஓமைக்ரான் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றின் பாதிப்பு முற்றிலும் குறையாத நிலையில் இந்த புதிய ஓமைக்ரான் வைரஸின் தாக்கம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த ஓமைக்ரான் வைரஸ் இந்தியாவின் மாநிலங்களில் தலா 1 அல்லது 2 என்ற கணக்கில் பரவத் தொடங்கியது. இந்தியாவில் தற்போது 153 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
10 & 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை – மாநில அரசு வெளியீடு!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரந்தீப் குலேரியா சமீபத்தில் அளித்த பேட்டியில் ஓமைக்ரான் தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக பிரிட்டனில் ஓமைக்ரான் பாதிப்பு கூடியுள்ளதாக தெரிவித்தார். ஓமைக்ரான் தொற்றால் ஏற்படப்போகும் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்திய மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றார். சமூக இடைவெளி, முகக்கவசம் போன்ற அரசின் விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.
TCS நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – ஜன.7 விண்ணப்பிக்க கடைசி தேதி!
இந்தியாவில் இதுவரை 11 மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 54 பேருக்கு தொற்று இருப்பதாக அம்மாநில சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். கர்நாடகாவில் 14 பேருக்கும், ராஜஸ்தானில் 17 பேருக்கும், கேரளாவில் 11 பேருக்கும், தெலுங்கானாவில் 20 பேருக்கும் தொற்று பரவியுள்ளது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் 22 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.