தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!

தென் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. இந்த தகவல் மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதன்படி தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு பெய்கின்ற கனமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு:

தமிழகத்தில் சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் வறண்ட வானிலை குறைந்து மாநிலம் முழுவதும் குளிர்ந்த நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தென்‌ தமிழக மாவட்டங்கள்‌ மற்றும்‌ மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

6 மாவட்டங்களில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல் – அரசு அதிரடி உத்தரவு!

19.04.2022: தென்தமிழகம்‌ மற்றும்‌ வட தமிழக உள்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தென்‌ தமிழக மாவட்டங்கள்‌ மற்றும்‌ மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

20.04.2022: தென்‌ தமிழக கடலோர மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

21.04.2022: தமிழக கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

22.04.2022: தமிழக கடலோர மாவட்டங்கள்‌, மேற்கு தொடர்ச்‌சி மலை பகுதி மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

23.04.2022: கன்னியாகுமாரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பறிலை 36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கக்கூடும்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!