6 மாவட்டங்களில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல் – அரசு அதிரடி உத்தரவு!
கொரோனா அலையில் இருந்து பல மாநிலங்கள் படிப்படியாக மீண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நான்காம் அலை தாக்கம் பரவாமல் இருக்க பல மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் படி உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள்:
நாடு முழுவதும் பல மாநிலங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. மத்திய மாநில அரசுகளின் துரித நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. கொரோனாவின் கோரத்தாண்டவத்தில் இருந்து மீள பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டது. மேலும் தடுப்பூசி செலுத்தப்பட்டும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாலும் கொரோனா தாக்கத்தில் இருந்து பல மாநிலங்கள் மீண்டுள்ளது.
பாரதியுடன் மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்துள்ள கண்ணம்மா – துரத்தி விட பிளான் போடும் பாரதி!
முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என புரட்டி போட்ட நிலையில் நான்காம் அலை வர வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. ஜூன் மாதத்தில் கொரோனா தொற்றின் நான்காவது அலை வீசக் கூடும் என ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால் பல்வேறு மாநிலங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை அமல்படுத்த தொடங்கி இருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கி இருக்கிறது.
தமிழகத்தில் வரும் 24ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் – அரசு அறிவிப்பு!
அதன் படி உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கியுள்ளது அம்மாநில அரசு. தலைநகர் டெல்லிக்குள் வரும், அம்மாநிலத்தின், கவுதம்புத் நகர், காசியாபாத், ஹபூர், மீரட், புலன்சார் ஆகிய மாவட்டங்களிலும், தலைநகர் லக்னோ என மொத்தம் 6 மாவட்டங்களில் முகக்கவசம் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கொரோனா பாதிப்பு குறைவாக இருந்ததால், இம்மாத தொடக்கத்தில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை அம்மாநில அரசு தளர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.