தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் வளிமண்டல மேலது சுழற்சி காரணமாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கனமழை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை குறைந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். காரணம் நடப்பு ஆண்டு கோடை வெயில் அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியது தான். தற்போதும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து பூமியை குளிர செய்துள்ளது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் அடுத்து வரும் நாட்களுக்கான வானிலை நிலவரத்தை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 14 முதல் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
அதன்படி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தமிழ்நாடு – வட இலங்கை கடலோர பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் இன்று தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனை தவிர வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் வானம் 2 நாட்களுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.