ஏப்ரல் 14 முதல் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
நாட்டில் உள்ள வங்கிகளுக்கான விடுமுறை நாட்களை முன்னதாக அறிவித்து விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இனி வரும் நாட்களில் தொடர் விடுமுறையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கி விடுமுறை:
வரும் வாரத்தில் நாட்டில் உள்ள முக்கிய வங்கிகள் மூடப்படும் என்பதால் முக்கியமான வேலைகளுக்காக உங்கள் வங்கிக்குச் செல்ல நீங்கள் திட்டமிட்டால், உங்கள் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் பல இந்திய பண்டிகைகள் மற்றும் சிறப்பு சந்தர்ப்பங்கள் காரணமாக, நாட்டில் உள்ள பல வங்கிகள் அடுத்த வாரம் மூடப்படும். இந்த விடுமுறைகள் சிறிய சிரமத்தை ஏற்படுத்தலாம், எனவே மக்கள் தங்கள் முக்கியமான வங்கிப் பணிகளை இந்த வாரத்திலேயே முடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நாட்டின் பொது மற்றும் தனியார் வங்கிகளுக்கான வங்கி விடுமுறைகளின் பட்டியலை வெளியிடுகிறது. மொத்தத்தில் ஏப்ரல் மாதத்தில் 15 விடுமுறைகளும், அடுத்த வாரம் 6 விடுமுறைகளும் உள்ளது. வங்கி விடுமுறை என்பது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் என்பதால் தங்கள் மாநிலத்திற்கான விடுமுறை நாட்களை மக்கள் சோதித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். வரும் நாட்களில் விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியலை கீழே குறிப்பிட்டுள்ளோம்.
விடுமுறை பட்டியல்:
- ஏப்ரல் 10 – ஞாயிறு
- ஏப்ரல் 14 – டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி/மஹாவீர் ஜெயந்தி/பைசாகி/வைசாகி/தமிழ் புத்தாண்டு தினம்/செய்ரோபா/பிஜு விழா/போஹாக் பிஹு. ஷில்லாங் மற்றும் சிம்லாவைத் தவிர பெரும்பாலான இடங்களில் வங்கிகள் மூடப்படும்.
- ஏப்ரல் 15 – புனித வெள்ளி / பெங்காலி புத்தாண்டு தினம் (நபபர்ஷா) / ஹிமாச்சல் நாள் / விஷு / போஹாக் பிஹு. ஜெய்ப்பூர், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் தவிர பெரும்பாலான இடங்களில் வங்கிகள் மூடப்படும்.
- ஏப்ரல் 16 – அசாமில் போஹாக் பிஹு
- ஏப்ரல் 17 – ஞாயிறு
144 தடை உத்தரவு மீண்டும் அமல் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
- ஏப்ரல் 21 – காடியா பூஜை
- ஏப்ரல் 23 – நான்காவது சனிக்கிழமை – இந்த நாளில் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும்
- ஏப்ரல் 24 – ஞாயிறு
- ஏப்ரல் 29 – ஷப்-இ-கத்ர், ஜுமாத்-உல்-விடா. ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள வங்கிகள் இந்த நாளில் மூடப்படும்.