தமிழகஅரசு போக்குவரத்து துறை ஊழியர்களின் முக்கிய கோரிக்கை – அமைச்சர் அளித்த பதில்!
தமிழகத்தில் அரசு போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பண பலன்களை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
பண பலன்கள்:
தமிழக அரசு ஊழியர்கள் தங்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று போராடி வருகின்றனர். முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தேர்தலின் போது வாக்குறுதி அளித்தபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
நாட்டில் டிஜிட்டல் பொருளாதார துறையில் 1 கோடி வேலைவாய்ப்புகள் – மத்திய அமைச்சர் உறுதி!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தமிழக போக்குவரத்து துறையில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் பண பலன்களை வழங்க வேண்டி கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து பேசிய அமைச்சர் சிவ சங்கர் நிதிநிலை பொறுத்து படிப்படியாக ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பலன் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். மேலும் முதல் கட்டமாக 1,241 பேருக்கு பணப்பலன் வழங்கும் பணியையும் தொடக்கி வைத்தார்.