நாட்டில் டிஜிட்டல் பொருளாதார துறையில் 1 கோடி வேலைவாய்ப்புகள் – மத்திய அமைச்சர் உறுதி!
மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நாட்டின் தொழில்நுட்ப துறை மற்றும் டிஜிட்டல் துறைகளில் வேலைவாய்ப்புகளை குறித்து செய்தியாளர்களிடம் பல முக்கிய தகவல்களை அளித்துள்ளார்.
வேலைவாய்ப்பு:
நாட்டின் வேலைவாய்ப்பு நிலவரம் சரியாக இருக்கும் பட்சத்தில் பொருளாதாரம் சீராக இருக்கும். இதனால் அரசு நாட்டில் அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றது. இந்நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள் எலக்ட்ரானிக்ஸ், ஸ்டார்ட் அப்கள் மற்றும் ஐடி ஆகிய துறைகளில் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் 1 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
குடியரசு தின விழா 2023: தமிழகத்தில் பிரமாண்டமாக கொண்டாட இட மாற்றம் – அதிகாரி தகவல்!!
Exams Daily Mobile App Download
இதன் காரணமாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அதிக அளவிலான உதவிகளை செய்து வருவதாகவும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆரம்ப நிதியாக ரூ. 5 முதல் ரூ,10 லட்சம் வரை வழங்க இருப்பதாகவும், அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை நிதி உதவி செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா தற்போது தகவல்தொழில்நுட்ப உற்பத்தியாளராக மாறியுள்ளதாகவும் கூறியுள்ளார்.