கொரோனா 2வது அலையை சிறப்பாக கையாண்டதில் தமிழகம் முதலிடம்!
இந்தியாவில் கொரோனாவை 2வது அலையை சிறப்பாக கையாண்ட மாநிலங்கள் குறித்து தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.
தமிழகம் முதலிடம்:
கொரோனா இரண்டாம் அலை இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அனைத்து மாநில அரசுகளும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தின. கொரோனா விதிமுறைகளை கையாள மக்களுக்கு அறிவுறுத்தினர். இந்த உருமாறிய கொரோனா அதிக வீரியத்துடன் பரவும் வைரஸ் என மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றனர். அதானல் இதன் பாதிப்பும் கடுமையாக இருந்தது. இந்தியாவில் சில மாநிலங்கள் அதிகம் தொற்றால் பாதிக்கப்பட்டது. அந்த மாநிலங்களில் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.
1 முதல் 12ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தீவிரம் – மாநகராட்சி பள்ளிகள் மீது ஆர்வம்!
அதில் தமிழ்நாடு முக்கிய இடத்தில் இருந்தது. கடந்த 1 மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 35,000 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்தது. அதன் பின் அரசின் சீரிய முயற்சியால் தொற்று பாதிப்பும், பலி எண்ணிக்கையும் சற்று குறைய ஆரம்பித்தது. தற்போது தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை 10,000க்கும் கீழ் குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவை சிறப்பாக கையாண்ட மாநிலங்கள் குறித்து தனியார் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது.
ஜூலை 1 முதல் ஊரடங்கில் புதிய தளர்வுகள் அமல் – பிரான்ஸ் அரசு!
இந்த ஆய்வில், கொரோனாவை சிறப்பாக கையாண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது. மேலும் தமிழகத்தை சேர்ந்த 59 சதவீத மக்கள், கரோனா இரண்டாம் அலையை தமிழக அரசு சிறப்பாக கையாண்டுள்ளதாக லோகல்சர்கிள் தகவல் தெரிவித்துள்ளன. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் சிறப்பான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்திற்கு அடுத்தடுத்த இடத்தில் ஆந்திராவும் , உத்தரப்பிரதேச மாநிலமும் உள்ளது என தனியார் நிறுவன ஆய்வு தெரிவித்துள்ளது.