1 முதல் 12ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தீவிரம் – மாநகராட்சி பள்ளிகள் மீது ஆர்வம்!
தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் மாநகராட்சி பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனியார் பள்ளிகளிலிருந்து மாணவர்கள் அதிகம் சேருவதாகவும் கூறுகின்றனர்.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் 202x-22ம் ஆண்டிற்கான புதிய கல்வியாண்டும் தொடங்கியுள்ளது. அதனால் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. கடந்த 2 வருடங்களாகவே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. தற்போது திமுக தலைமையிலான அரசு அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த மேலும் திட்டமிட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிவத்திற்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த ஊரடங்கு காலத்திலும் கல்வி அளிக்கும் நோக்கில் அரசு கல்வி தொலைக்காட்சிகள் மூலம் பாடம் கற்பிக்கிறது. இது ஏழை எளிய மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. மேலும் தொலைக்காட்சி வாயிலான வகுப்புகளுக்கு இலவச பாட நூல்களை அந்தந்த பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு அரசு வழங்கி வருகிறது. மேலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை மக்களுக்கு தெரிவிக்க பள்ளிகளின் வாசலில் பேனர்கள் வைக்கவும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளது.
1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 1 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
அதனை தொடர்ந்து கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 16 மேல்நிலைப் பள்ளிகள், 10 உயர்நிலைப் பள்ளிகள், 15 நடுநிலைப் பள்ளிகள், 40 தொடக்கப் பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கான ஒரு பள்ளி என மொத்தம் 82 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது எனவும் தனியார் பள்ளிகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் மாநகராட்சி பள்ளிகளில் சேருகின்றனர் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.