ஜூலை 1 முதல் ஊரடங்கில் புதிய தளர்வுகள் அமல் – பிரான்ஸ் அரசு!
பிரான்ஸ் மாகாணத்தில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் விளைவாக தற்போது கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக புதிய தளர்வுகளை பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. புதிய தளர்வுகள் அனைத்தும் நாளை (ஜூலை 1) முதல் அமலுக்கு வரவுள்ளது.
பிரான்ஸ்:
உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா என்னும் கொடிய வகை வைரஸ் தொற்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்படி பிரான்ஸ் நாட்டில் மக்களை பாதுகாக்கும் பொருட்டு முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.
வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க தவறியர்களுக்கு மறுவாய்ப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இதையடுத்து பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி வழங்கப்பட்டது. பிரான்சில் கொரோனா தடுப்பூசி நன்கு பலனளித்தது. இதன் விளைவாக தற்போது பிரான்சில் கொரோனா பாதிப்பு வேகமாக கட்டுக்குள் வந்தது. இதையடுத்து பிரான்ஸ் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அளித்து உத்தரவு பிறப்பித்தது. பிரான்சில் இன்றுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் நாளை (ஜூலை 1) முதல் அமலுக்கு வரவுள்ள தளர்வுகள் குறித்த முழு விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
ஜூலை 16 வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!
புதிய தளர்வுகள்:
- அனைத்து உணவகங்கள், மது சாலை அருந்தகங்கள் 100% வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி.
- திரையரங்கம், இசைக் கூடங்கள், நாடக அரங்குகள் போன்றவை திறக்கப்படும்.
- விளையாட்டு கூடங்கள், விளையாட்டு அரங்கங்கள், உடற்பயிற்சி கூடங்கள் அனைத்தும் திறக்க அனுமதி,
- வர்த்தக கண்காட்சிகள், கேளிக்கை நிகழ்வுகளுக்கு அனுமதி.
- படகு பயணங்களுக்கு அனுமதி.
- திருமணங்கள், மத விழாக்கள் நடைபெற அனுமதி.
- இறுதி சடங்குகளில் கலந்து கொள்ள கட்டுப்பாடுகள் இல்லை.
- இரவு விடுதிகள், டிஸ்க்கோ போன்றவற்றை செயல்பட ஜூலை 9 முதல் அனுமதி.