தமிழக கோயில் நில ஆக்கிரமிப்பு வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!!
தமிழகத்தில் கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கூடாது என்று தேசிய பட்டியலின ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு தற்போது சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இடைக்கால தடை:
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வது அதிக அளவு நடந்து வருகிறது. இது குறித்து துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்தது.
வரும் 5ம் தேதி மதுபான கடைகள் மூடல் – சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
இந்த நிலையில் கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கூடாது என்று பட்டியலின ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து கிருஷ்ணகிரியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக அவர் அளித்த மனுவில் கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கூடாது என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இன்று விசாரணைக்கு வந்த இந்த மனுவில் பட்டியலின ஆணையமானது அதிகார வரம்பை மீறி உத்தரவு பிறப்பித்தது ஏன்? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கூடாது என்ற தேசிய பட்டியலின ஆணையத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடையும் விதிக்கப்பட்டுள்ளது.