வரும் 5ம் தேதி மதுபான கடைகள் மூடல் – சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு வருகின்ற 5 ஆம் தேதி அனைத்து விதமான டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சென்னை மாநகர கலெக்டர் அமிர்த ஜோதி உத்தரவிட்டுள்ளார்.
டாஸ்மாக் மூடல்:
தமிழகத்தில் வருமான ஈட்டும் துறையாக டாஸ்மாக் மதுபான கடைகள் இருக்கின்றன. சில முக்கியமான தினங்கள் அன்று டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும். அந்த வகையில் சென்னையில் வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு வருகின்ற 5ம் தேதி அனைத்து விதமான டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சென்னை மாநகர கலெக்டர் அமிர்த ஜோதி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ் சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும், அனைத்துவிதமான பார்களும் வருகின்ற 5 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் மூட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதன் படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பார்கள், கிளப்புகளைச் சேர்ந்த பார்கள், ஓட்டல்களைச் சேர்ந்த பார்கள் உள்ளிட்டவை கண்டிப்பாக மூடப்பட வேண்டும் எனவும் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி மதுபான கடைகள் திறந்தால் மதுபான விற்பனை விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.