பொதுமக்கள் கவனத்திற்கு: இனி நாட்டில் எந்தெந்த பொருட்களின் விலை உயரும் மற்றும் குறையும்? விவரம் உள்ளே!!
2023-24 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டுக்கு பிறகு எந்தெந்த பொருட்களின் விலை அதிகரித்துள்ளது என்பது பற்றியும் குறைந்துள்ளது என்பது பற்றியும் பார்ப்போம்.
பொருட்களின் விலை:
2023-24ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று (பிப்ரவரி 1) நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்தார். இதில் சில பொருட்கள் மீதான வரியை உயர்த்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பட்ஜெட்டில், ரப்பர் மீதான அடிப்படை இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போல், சமையலறையில் பயன்படுத்தப்படும் சிம்னிக்கான சுங்க வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது தற்போது 7.5 சதவீதத்திலிருந்து 15% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டம் குறித்த விவரங்களும், பயன்களும் – தொழில் நிறுவனங்கள் கவனத்திற்கு!!
இதனை தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட்டுகள் மீதான இறக்குமதி வரியானது 16% ஆக உயர்த்தப்படுவதாகவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தங்கம், வைர நகைகள் மீதான சுங்க வரி உயர்வு, சைக்கிள், பொம்மைகள், சொகுசு கார்கள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் இவற்றின் விலை பட்ஜெட்டிற்கு பிறகு அதிகரிக்கும்.
இதனை தொடர்ந்து, டிவி பேனல்களின் ஓப்பன் செல் உதிரிபாகங்ள், ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரங்கள் தயாரிக்கப் பயன்படும் விதைகள் ஆகியவற்றிக்கான சுங்க வரி ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதே போல், லித்தியம் பேட்டரிக்கான இறக்குமதி வரியை குறைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இறால் மீனின் ஏற்றுமதியை அதிகப்படுத்த இறால் தீவனத்தின் சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. அதனால் மேற்கண்ட பொருட்க்ளின் விலை பட்ஜெட்டிற்கு பிறகு குறையும் என குறைப்படுகிறித்து.