தமிழக பள்ளிகளுக்கு நாளை (ஜூலை 12) விடுமுறை – காரணம் இதோ!
நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற நாகநாத சுவாமி கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு நாளை (ஜூலை 12) பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை
தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள நாகநாத சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தேரோட்ட திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாகைக்கு வருகை தருவது உண்டு. அந்த வகையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நாகநாத சுவாமி கோயிலில் தேரோட்டம் நடைபெறவில்லை. இப்போது, தமிழகத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளதால் இந்த திருவிழாக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதனால் இந்த ஆண்டு நாகநாத சுவாமி கோவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடத்தப்பட இருக்கிறது. அந்த வகையில் கொடியேற்றத்துடன் இந்த திருவிழாவிற்கான நிகழ்வுகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துவங்கி இருக்கும் நிலையில், இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜூலை 12ம் தேதியன்று நடைபெற இருக்கிறது. இந்த தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு நாகையில் நாளை (ஜூலை 12) ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – குறைந்த விலையில் வினா வங்கி விவரம் இதோ!
இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில் நாகை மாவட்டம் நாகூர் நாகநாதர் கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை (ஜூலை 12) நடைபெற உள்ளது. இந்த தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கும் நாளை (ஜூலை 12) விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜூலை 30ம் தேதி வேலை நாளாக செயல்படும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.