தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கடந்த 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 1 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆராய்ந்து வருகிறது. மேலும் பெற்றோர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் போன்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது.
20 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்போருக்கு மீண்டும் தேர்வு – அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு!
இந்த கருத்துக்கள் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மருத்துவ குழுக்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அதன் பிறகு முதல்வர் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சேர்த்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் 1ம் வகுப்பு முதல் அனைத்து வகுப்புகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்தும் பெற்றோர் மத்தியில் இன்னும் அச்சம் விலகவில்லை என்று கூறியுள்ளார்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இலவச டோக்கன்கள் – ஆன்லைனிலா?அதிர்ச்சியில் மக்கள்!
மேலும் மாணவர்களை பள்ளிக்கு வர சொல்லி ஆசிரியர்கள் கட்டாயப்படுத்த கூடாது. பள்ளியில் கொரோனா பாதிப்பு இருந்தால் பள்ளிக் கல்வித்துறையின் கவனத்துக்கு கொண்டு வரவேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது உச்ச வரம்பை நீக்குவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. பள்ளிகளில் உளவியல் ஆசிரியர்கள் தேவை உள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.