திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இலவச டோக்கன்கள் – ஆன்லைனிலா?அதிர்ச்சியில் மக்கள்!
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு இலவச டோக்கன்கள் நேரடியாக வழங்கப்பட்டு வந்த நிலையில் நாளை முதல் டோக்கன்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான்:
நம்பர் 1 பணக்கார கடவுளாக திகழக்கூடிய ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மேலும் தரிசனத்திற்கு வருவதற்கு 3 நாட்களுக்கு முன்பாக டெஸ்ட் செய்த கொரோனா நெகட்டிவ் சான்றினை தேவஸ்தானத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நேற்றைய தினம் தேவஸ்தானம் அறிவித்திருந்தது.
20 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்போருக்கு மீண்டும் தேர்வு – அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு!
இதுவரையில் சிறப்பு தரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 8ம் தேதி முதல் உள்ளூரில் உள்ள மக்களுக்கு மட்டும் தினமும் 2 ஆயிரம் பேருக்கு ஏழுமலையான் தரிசனத்திற்கான இலவச டோக்கன்கள் வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைவருக்கும் இலவச டோக்கன்கள் வழங்கப்பட்டு இரவு 11.30 மணி வரை சுமார் 8000 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதி அளித்திருந்தது.
10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – அக்.24 தேசிய திறனாய்வு தேர்வு!
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்களது ஆதார் அட்டையினை காண்பித்து இலவச டோக்கன்களை நேரடியாக பெற்றுக் கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவித்திருந்த நிலையில் நேரடியாக மக்கள் குவிந்ததால் டோக்கன்கள் சீக்கிரம் தீர்ந்து விட்டன. இதனால் சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் ஏமாற்றமடைந்ததால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.