தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் திடீரென மருத்துவமனையில் அனுமதி – இன்புளூயன்சா காய்ச்சல் பாதிப்பு!
தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கு இன்புளூயன்சா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்புளூயன்சா காய்ச்சல்:
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக டெங்கு, இன்ஃபுளுயன்சா போன்ற காய்ச்சலால் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இந்த காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்ததால் தான் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது பாதிப்பு குறைந்த காரணத்தால், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
இதை தொடர்ந்து தமிழகத்திலும் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் காலாண்டு தேர்வுகள் நடைபெறுவதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அரசு தயக்கம் காட்டி வருகிறது.
தமிழக ஊர்காவல் படையில் 10வது முடித்தவர்களுக்கான வேலை – உடனே விரையுங்கள்!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அவர்களுக்கு நேற்று தலைமை செயலக அமைச்சரவை கூட்டம் நடந்து முடித்த பிறகு, திடீரெனெ உடல் நல குறைவு ஏற்பட்டது. அதனால் அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு எச்1 என்1 வகை இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்