தமிழகத்தில் மொத்தமாக மாறவுள்ள ரேஷன் கடைகள்.. புதுமையை புகுத்திய அரசு – மக்கள் வரவேற்பு!
நவீன வசதிகளுடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடையை தமிழக அரசு முன்மாதிரி ரேஷன் கடை என அறிவித்துள்ளது. இது போன்று தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளும் மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரேஷன் கடை:
தமிழக ரேஷன் கடைகளில், ரேஷன் அட்டைதாரர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அவ்வப்போது புதுப்புது வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ரேஷன் கடைகளில் Wifi வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 48வது வார்டு கணேஷ் நகரில் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் 15.78 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த ரேஷன் கடையில் 24 மணி நேரமும் ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தும் வகையில் Wifi வசதி கிடைக்கும். இதே போன்று, தீயணைப்பு உபகரணங்கள், கண்காணிப்பு கேமராக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வழி பாதை, மழைநீர் சேகரிப்பு, கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது. அத்துடன் புராதன சின்னங்கள் வரையப்பட்ட வண்ண ஓவியங்கள், திருவள்ளுவர் ஓவியம் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளது.
ரேபிஸ் நோய் பாதிப்பு உயர்வு – WHO வெளியிட்ட அறிக்கை… மாநில சுகாதாரத்துறையின் முக்கிய உத்தரவு!
Exams Daily Mobile App Download
அதனால் தமிழக அரசு இந்த ரேஷன் கடையை முன்மாதிரி ரேஷன் கடை என அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 2252 ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றால் இந்த ரேஷன் கடையை முன்மாதிரி ரேஷன் கடையாக கொண்டு அனைத்து ரேஷன் கடைகளும் மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.