ரேபிஸ் நோய் பாதிப்பு உயர்வு – WHO வெளியிட்ட அறிக்கை… மாநில சுகாதாரத்துறையின் முக்கிய உத்தரவு!
மஹாராஷ்டிராவில் ரேபிஸ் நோய் அறிவிக்க கூடிய நோய்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால் மருத்துவமனைகள் உடனடியாக மாநில சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேபிஸ் :
ரேபிஸ் வைரஸ் வெறி நாய்கள் கடிக்கும் போது மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த வைரஸ் மனிதர்களை மட்டுமல்ல பூனை, குதிரை, ஆடு, வௌவால் உள்ளிட்ட விலங்குகளுக்கும் பரவும். வெறிநாய் கடித்து 5 நாட்களுக்கு பிறகுதான் இந்த நோயின் அறிகுறிகள் தென்படும். தலைவலி, காய்ச்சல் போன்றவை இதற்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளாகும். மேலும் நோய் கடுமையானால் சுவாச செயலிழப்பு கூட ஏற்படலாம். அதனால் நாய் கடித்த 48 மணி நேரத்தில் ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் ரேபிஸ் வைரஸ் நோய் அறிவிக்கக்கூடிய நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி மகாராஷ்டிராவில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 200 ரேபிஸ் இறப்புகள் நிகழ்வதாகவும் இதில் 20 பேர்களின் விவரங்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதனால் சுகாதாரத்துறை இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.