4,000 ரேஷன் கடை ஊழியர்களுக்கான தேர்வு முடிவுகள் எப்போது ? எதிர்பார்ப்பில் தேர்வர்கள்!
தமிழகம் முழுவதும் இருக்கும் ரேஷன் கடைகளில் 4000 பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதுவரை இத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகாததால் தேர்வர்கள் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ரேஷன் கடை
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர் பணியிடத்தில் காலியாக இருந்த 4,000க்கும் மேற்பட்ட பணியிடத்திற்கு கடந்த டிசம்பர் மாதம் 15 முதல் 30 தேதி வரை நேர்காணல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் முதற்கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இதை தொடர்ந்து, விண்ணப்பதாரரின் அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக மாலை நேரத்தில் நேர்காணல் தேர்வு நடத்தப்பட்டது.
நீட் தேர்வர்கள் கவனத்திற்கு – தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இதற்கான தேர்வு முடிவுகள் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை இதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகாமல் உள்ளது. ஆனால், கிராம உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு முடிவுகள் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் பெற்று அந்தந்த மாவட்ட வட்டாட்சியர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
ரேஷன் கடை ஊழியர்களை தேர்வு முறையில் இது போன்ற வெளிப்படைத்தன்மை இல்லை என்று தேர்வர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். அதாவது ரேஷன் கடை ஊழியர்களுக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பெயர் பட்டியல் இப்போது வரை வெளியிடப்படாமல் உள்ளது. ஆனால் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் இணையதளத்தில் இந்த பட்டியல் வெளியிடப்படும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது என தேர்வர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.