தமிழக காவலர்கள் ‘இதனை’ செய்ய கூடாது – டிஜிபி முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசின் கீழ் பணிபுரிந்து வரும் காவலர்கள் தங்களது சொந்த வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்ட கூடாது எனவும் அரசு வாகனங்களில் மட்டுமே போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
புதிய உத்தரவு:
தமிழ்நாடு காவல்துறையில் பல சாதனைகளை செய்து தற்போது டி.ஜி.பியாக களமிறங்கி இருக்கும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு காவல்துறையில் பணிபுரிந்து வரும் காவலர்களுக்கு ஏகப்பட்ட புதிய விதிமுறைகளை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறார். தன்னுடைய 25வது வயதில் காவல்துறையில் இணைந்த அவர் பல மாவட்டங்களில் பணிபுரிந்து இருக்கிறார். இவர் சிறைத்துறை தலைவராக இருந்த போது கைதிகளின் மறுவாழ்விற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு – முக்கிய உத்தரவு!
இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறையின் புதிய தலைமை இயக்குநராக அவர் கடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் பதவி ஏற்று இருக்கிறார். அதன் பின் பல விதிமுறைகளை அவர் வெளியிட்டு இருக்கிறார். அந்த வகையில் தமிழ்நாடு காவல்துறை காவலர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட்டு இருக்கிறார். அதில் பொதுவாக காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை தங்களது சொந்த வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டி இருப்பார்கள்.
Exams Daily Mobile App Download
அதற்கு தற்போது தடை விதித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதில் காவல் துறையில் அரசு வாகனங்களில் மட்டுமே போலீஸ் ஸ்டிக்கர்களை ஒட்டி பயன்படுத்த வேண்டும் எனவும் காவலர்களின் தனி நபர் வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர்களை ஒட்டக் கூடாது எனவும், இந்த உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மண்டல ஐ.ஜி.க்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.