தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழகத்தில் திருச்சி மாவட்ட சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
தமிழகம் கொரோனா மூன்றாம் அலையிலிருந்து மீண்டு வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் துறைகள் வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்ததை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தனியார் துறையை தொடர்ந்து அரசுத்துறையும் காலிப்பணியிடங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது திருச்சி மாவட்டத்தில் உள்ள சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள 5 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – மதுரை டூ ராமேஸ்வரம் சேவை மீண்டும் துவக்கம்!
அதில் குளிர்பதனமெக்கானிக் பதவியில் ஒரு பணியிடம் உள்ளது. இப்பணிக்கு ஐடிஐ – குளிர்பதன மெக்கானிக் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பணியில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அடுத்ததாக தரவு உள்ளீட்டாளர் பணியில் ஒரு காலியிடம் உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இளங்கலை கணினி அறிவியல் படிப்பு மற்றும் கணினி பயன்பாடு பட்டயப்படிப்பு /முதுகலை கணினி பயன்பாடு பட்டயப்படிப்பு மற்றும் தமிழ் (ம) ஆங்கிலம் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். ஐடி ஒருங்கிணைப்பாளர் பணியில் காலியிடங்களின் எண்ணிக்கை -1 முதுகலை கணிணி பயன்பாடு படிப்பு முடிருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
மேலும் இளங்கலை பொறியியல் துறை சார்ந்த ஒரு வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணக்கு உதவியாளர் இளங்கலை வணிகவியல் கணிணி அறிவு இருக்க வேண்டும். ஊர்தி ஓட்டுநர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும் பணியில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்களுக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்ப பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம்.