தமிழக அரசு கலை & அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை – இன்று முதல் துவக்கம்!
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆக. 5ம் தேதி தொடங்கும் என கடந்த புதன்கிழமை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ள படி இன்று நேரடி முறையில் கலந்தாய்வு நடைபெறத் தொடங்கியுள்ளது. அதற்கான சில விதிமுறைகள் குறித்து இயக்குநரகம் தற்போது தெரிவித்துள்ளது.
கல்லூரி கலந்தாய்வு :
தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1.30 லட்சம் இடங்களில் சேர்வதற்கு 2 லட்சத்து 98 ஆயிரத்து 56 பேர் கலந்து கொள்ளத் தகுதி பெற்றுள்ளனர். அதாவது, கடந்த ஜூன் 22ஆம் தேதி முதல் ஜூலை 27ஆம் தேதி இரவு 12 மணி வரையிலும் இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான (2022-23) விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 4 லட்சத்து 7 ஆயிரத்து 45 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர்.
Exams Daily Mobile App Download
அவர்களில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 765 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தனர். மேலும், 2 லட்சத்து 98 ஆயிரத்து 56 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணங்களைச் செலுத்தி இருந்தனர். அதை தொடர்ந்து கலந்தாய்வுக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை கல்லூரிக் கல்வி இயக்குனரகம் அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்தது. அவற்றை சரிபார்த்து, விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண்களை கணக்கில் கொண்டு பாடப்பிரிவு வாரியாக இறுதிப் பட்டியலை அனைத்து கல்லூரிகளும் இணையதளத்தில் கடந்த (ஆக.3) அன்று வெளியிட்டது.
தமிழகத்தில் நாளை (ஆக.6) மின்தடைக்கான பகுதிகள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு
அத்துடன் தகுதி பெற்ற மாணவர்கள் இன்று தொடங்கியுள்ள மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கு உரிய சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என கலந்தாய்வு குறித்த மொத்த விவரங்களையும் மொபைல் எண், மின்னஞ்சல் மூலம் அந்தந்த கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. அதன்படி, முதற்கட்ட கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது. மேலும், மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் எவ்வித புகாருக்கும் இடம் தராதவாறு கலந்தாய்வை கல்லூரிகள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும், முதல் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது குறித்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.