தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர், மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை!
தமிழகத்தில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் புகை பிடிக்கக்கூடாது, ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது மற்றும் மாணவர்களுக்கான சில அறிவுரைகள் அடங்கிய சுற்றறிக்கையை தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளார்.
சுற்றறிக்கை:
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலைக்கு பின்னர் கடந்த மாதம் முதல் 1 -12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்க உள்ளது. 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே 5ம் தேதியும் மேலும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதியும் பொதுத் தேர்வு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TVS மோட்டார் நிறுவனத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – 10 வது தேர்ச்சி போதும்..!
இதனையடுத்து மாணவர்கள் தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் மாணவர்களின் பாடசுமையை குறைக்க பாடத்திட்டம் குறைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து கோடை விடுமுறை நாட்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
TNPSC முக்கிய அறிவிப்பு வெளியீடு – முழு விவரங்கள் இதோ..!
அதில் பள்ளி வளாகங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிடத்தில் போதிய தண்ணீர் வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் ஜீன்ஸ் பேண்ட் அணியக் கூடாது ஆசிரியர்கள் கழுத்தில் செயின் அணிந்து இருந்தால் அது வெளியே தெரியாத வகையில் அணிய வேண்டும். மாணவர்களின் செயல்பாடுகளை கவனிக்க உதவி தலைமை ஆசிரியர் தலைமையில் கண்காணிப்பு அலுவலர் நியமிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.