சென்னை: இன்று அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இந்த வாரத்தின் தொடக்கத்திலேயே நகை விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மற்றும் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கம் விலை:
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால் அதிகமான மக்கள் தங்கத்தில் முதலீடு செய்தனர். இதனால் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அரசின் முயற்சியால் கொரோனா கட்டுக்குள் வந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடைகள், அலுவலகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இதனால் தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. இருந்தாலும் மக்கள் எதிர்பார்த்த அளவு குறையவில்லை என்று தான் கூற வேண்டும்.
HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் அறிவிப்பு – வீடு & கார் கடன்களுக்கான EMI உயர்வு!
இந்த நேரத்தில் நிலவிய உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையான போரின் தாக்கத்தால் தங்கத்தின் விலை மேன் மேலும் அதிகரித்தது. வழக்கமாக பண்டிகை மற்றும் சுப மூகூர்த்த தினங்களில் தங்கத்தின் விலை சற்று அதிகரிக்கும். ஆனால் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்த்த வண்ணம் உள்ளது. தங்கத்தின் விலையானது காலை மாலை என ஒவ்வொரு நேரங்களிலும் ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. தங்கம் என்பது ஒரு சிறந்த சேமிப்பாக பார்க்கப்படுகிறது. அதனால் பெரும்பாலும் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
Exams Daily Mobile App Download
இதன் விலையானது நாள் ஒன்றுக்கு இரண்டு முறை மாற்றம் அடைந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.200 குறைந்துள்ளது. அதன்படி 24 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.38,280 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.4,785 ஆக விற்பனையாகிறது. இந்த வாரத்தின் தொடக்கத்திலேயே நகை விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மற்றும் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.