சென்னை: நகை வாங்க இதுதான் சரியான நேரம் – அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!
தமிழகத்தில் கொரோனா எதிரொலியாக தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்தது. இருப்பினும் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு!
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக பொதுமக்கள் அதிகம் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தனர். இதனால் மக்கள் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து சேமிப்பு திட்டங்களில் அதிகம் முதலீடு செய்து வருவதாகவும் மற்றும் அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தங்கத்தில் முதலீடு செய்தால் பெண் குழந்தைகள் திருமணம் மற்றும் மேற்படிப்பு மிகவும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஜனவரி மாத தொடக்கத்தில் தங்கத்தின் விலை அதிக அளவில் உயர்ந்து இருந்தது.
EPFO ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – முக்கிய சுற்றறிக்கை வெளியீடு! தவறாமல் படிங்க!
தங்கத்தின் விலை அதிகரித்தாலும் பொதுமக்கள் பெருமளவில் தங்க நகைகளை வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக தங்க விலை மேலும் அதிகரித்து வருகிறது. ஆனால் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அந்த வகையில் சென்னையில் இன்று (ஜனவரி 27) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,574 ஆக குறைந்துள்ளது. மேலும் நேற்று இதன் விலை 4,367 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 37,096 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 504 ரூபாய் குறைந்து 36,592 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
IPL 2022: ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு கேப்டனாகும் ஜேசன் ஹோல்டர்? ஆகாஷ் சோப்ரா பரிந்துரை!
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.68.50 ஆக இருந்தது. இன்று அது ரூ.67.70 ஆக குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 67,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று 5,003 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் 24 கேரட் தங்கம் இன்று 4,940 ரூபாயாக குறைந்துள்ளது. அதேபோல, நேற்று 40,024 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 504 ரூபாய் குறைந்து 39,520 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த தங்கம் விலை குறைவு நகை பிரியர்களிடம் அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.