IPL 2022: ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு கேப்டனாகும் ஜேசன் ஹோல்டர்? ஆகாஷ் சோப்ரா பரிந்துரை!
2022 ஆம் ஆண்டுக்கான IPL தொடர் ஏப்ரல் மாதம் 2 ஆம் தொடங்கவுள்ளது. இதை தொடர்ந்து IPL மெகா ஏலம் பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தற்போது IPL அணிகளின் கேப்டன் தேர்வுகள் குறித்து BCCI அதிகாரி ஆகாஷ் சோப்ரா பேட்டியளித்துள்ளார்.
ஆகாஷ் சோப்ரா பரிந்துரை:
இந்த ஆண்டு IPL தொடரில் ஒரு அணி 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என்று BCCI அறிவித்திருந்தது. அதேபோல் ராயல் சேலஞ்சர்கள் பெங்களூர் அணி விராட் கோஹ்லி, கிளென் மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் என மொத்தம் 3 வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டது. கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்கள் பெங்களூர் அணி கேப்டன் பதவியிலிருந்து விராட் கோஹ்லி விலகுவதாக அறிவித்தார். அதனால் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் BCCI அதிகாரி ஆகாஷ் சோப்ரா வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டரை பரிந்துரைத்துள்ளார்.
மதுரையில் நாளை (ஜன.28) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
15 வது IPL சீசனுக்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 8 அணிகள் மட்டும் பங்கேற்று வந்த இத்தொடரில் புதிதாக லக்னோ, அகமதாபாத் ஆகிய அணிகளும் தற்போது இணைந்துள்ளன. இதனால், இந்த இரு அணிகளுக்கும் தரமான வீரர்கள் கிடைப்பதை உறுதிசெய்யும் விதமாக 15 வது சீசனுக்கு முன்பு மெகா ஏலம் நடைபெறவுள்ளது. 8 அணிகளும் விதிமுறைக்கு உட்பட்டு தலா 4 வீரர்கள் வரை மட்டுமே தக்கவைக்க வேண்டும் என பிசிசிஐ யின் அறிவிப்பின் படி 8 அணிகளும் தக்கவைத்துவிட்டன. புதிய இரண்டு அணிகளும் தலா 3 வீரர்களை தக்கவைத்துள்ளது.
ரயில்வே NTPC 35000 காலிப்பணியிடங்கள் – பீகாரில் பற்றி எரியும் சர்ச்சை! வலுக்கும் போராட்டங்கள்!
இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில் இதுவரை கேப்டனை தேர்வு செய்யாமல் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகளும் கேப்டனை நியமிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் ஏலத்தில் எடுத்து கேப்டனாக சிறந்தவராக இருப்பார் இன்றி BCCI அதிகாரி ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலத்தில் ஜேசன் ஹோல்டரை குறிவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் ஹோல்டர் 2018 ஆம் ஆண்டு சன்ரைஸஸ் அணியை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.