தமிழக அரசில் ரூ.15,000/- சம்பளத்தில் பெண்களுக்கான வேலை – ஜன.28 கடைசி நாள்..!
பொது இடங்களில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு அனைத்து விதமான உதவிகள் வழங்குவதற்கு ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இச்சேவை மையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை தேர்ந்தெடுக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு பெண் விண்ணப்பதார்களிடம் இருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விசாரணை பணியாளர் வேலைவாய்ப்பு விவரங்கள் :
- காலிப்பணியிடம் – 4
- சமூகப்பணி அல்லது உளவியல் ஆலோசகர் இயலில் இளங்கலை அல்லது முதுகலைப்பட்டம் படித்து முடித்தவராக இருத்தல் வேண்டும். வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு உதவி புரிதலில் குறைந்தபட்சம் 1 வருடம் முன் அனுபவம் வாய்ந்தவராக இருத்தல் வேண்டும்.
- அரசு மற்றும் அரசு சாரா திட்டங்களோடு ஒன்றினைந்து செயல்படுவதோடு குறைந்தபட்சம் 1 வருடம் முன் அனுபவம் ஆற்றுப்படுத்துதலில் இருத்தல் வேண்டும்.
- பயணச்செலவு மீள பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- தேனி மாவட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
- ரூ.15,000/- தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
- 24 மணி நேரம் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
பல்நோக்கு உதவியாளர் பணியிட விவரம் :
- காலிப்பணியிடம்-1
- எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி.
- தகுதி/நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராகவும்சமையல் தெரிந்த பெண் பணியாளராக இருத்தல் வேண்டும்.
- தேனி மாவட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
- மாதத்திற்கு ரூ.6,400/- தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
- 24 மணி நேரம் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.
- அதிகபட்ச வயது வரம்பு 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
பாதுகாவலர் பணியிட விவரம் :
- காலிப்பணியிடம்-1
- எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி.
- தகுதி/நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
- தேனி மாவட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
- மாதத்திற்கு ரூ.10,000,- தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
- 24 மணி நேரம் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.
- அதிகபட்ச வயது வரம்பு 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வம் உள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 28.01.2022க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.