பொங்கல் தள்ளுபடி: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையை ஒட்டி தங்கம் விலை இன்று குறைந்துள்ளது
நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி:
தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள் பல்வேறு இழப்புகளை இன்று வரை சந்தித்து வருகின்ற நிலையில் தற்போது மீண்டும் கொரோனா மற்றும் அதன் புது உருவமான அதிக பரவல் ஆற்றல் கொண்ட ஓமைக்ரான் தொற்று வேகமெடுத்து வருகிறது. இதனால் மக்கள் சேமிப்பில் ஆர்வம் காட்டி பல்வேறு வழிகளில் முதலீடு செய்து அதில் வரும் லாபத்தை சேமித்து வைத்து வருகிறார்கள். அதில் முதல் முதலீடாக ஆபரணத் தங்கத்தில் கவனம் செலுத்தி நகைகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
1 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுஉத்தரவு வரும் வரை பள்ளிகள் விடுமுறை – கொரோனா எதிரொலி!
கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு வந்தது. தற்போது ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை ஒட்டி தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. இதை தொடர்ந்து வெள்ளி விளையும் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. தற்போது உள்ள சூழலில் தங்கம் மற்றும் வெள்ளி விலையும் குறைந்ததால் தமிழக மக்களும், நகைப்பிரியர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு – முதல்வர் சூப்பர் அறிவிப்பு!
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.35,936 ஆக செய்யப்பட்டு வந்தது. தற்போது சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.35,776 விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,472க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கம் 8 கிராம் ரூ.38,704 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கத்துடன் சேர்த்து வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.60 ஆக விற்கப்பட்ட நிலையில் இன்று 30 பைசா குறைந்து ரூ.64.30 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.64,300 ரூபாய்க்கு விற்பனையாகிறது.