1 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுஉத்தரவு வரும் வரை பள்ளிகள் விடுமுறை – கொரோனா எதிரொலி!

0
1 - 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுஉத்தரவு வரும் வரை பள்ளிகள் விடுமுறை - கொரோனா எதிரொலி!
1 - 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுஉத்தரவு வரும் வரை பள்ளிகள் விடுமுறை - கொரோனா எதிரொலி!
1 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுஉத்தரவு வரும் வரை பள்ளிகள் விடுமுறை – கொரோனா எதிரொலி!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் 1 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. இருப்பினும் ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

விடுமுறை:

இந்தியா முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2020ம் ஆண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் தினசரி வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. இந்த ஆன்லைன் கல்வியில் மாணவர்கள் பல்வேறு சவால்களை சந்தித்த நிலையில் விரைவில் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த கோரிக்கை எழுந்தது. இதனடிப்படையில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்ததை அடுத்து பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்து அனைத்து மாநில அரசு பள்ளிக்கல்வித்துறையும் ஆலோசனையில் ஈடுபட்டது. அதன் பிறகு அரசின் நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது.

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு – முதல்வர் சூப்பர் அறிவிப்பு!

மாணவர்களுக்கு பருவத்தேர்வுகளும் நடைபெற்றது. மேலும் இந்த வருடம் 10, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளை நடத்தவும் திட்டமிடப்பட்டது. இந்த நேரத்தில் அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் தொற்று பரவ தொடங்கியது. இது டெல்டா வைரஸ் தொற்றை போல அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தனர். இதனால் மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதிக்க மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை – அரசு அறிவிப்பு!

இந்த சூழலில் நேரடி வகுப்புகள் நடைபெறுவது தொற்று பரவும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக பாடத்திட்டத்தை பின் தொடரும் புதுச்சேரியிலும் இன்று முதல் 1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 முதல் 9 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தவும் புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!