சென்னையில் இன்று அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 544 ரூபாய் குறைந்துள்ளது. வெகு நாட்களுக்கு பிறகு தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
நாடு முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று காரணத்தால் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கடைகள் , வணிக வளாகங்கள், மூடப்பட்டது. தொழில்கள் முடங்கியதால் முதலீட்டாளர்கள் கடும் பொருளாதார சரிவை சந்தித்தனர். இந்த நேரத்தில் ஏராளமானோர் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால் தங்கம் விலை அதிகரித்தது. இதனால் நகைப் பிரியர்கள் தங்க நகைகளை வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு அவ்வப்போது தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது.
தமிழக பள்ளிகளுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை? கல்வித்துறை பரிசீலனை!
இந்த நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் காரணத்தால் உலக அளவில் பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளது. அதனால் அத்திவாசிய பொருட்களில் விலை உயர்ந்தது. இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதன் விளைவாக ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டது. இதனால் சாமானிய மக்களும், நகைப் பிரியர்களும் நகை வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.40,000 ஐ தாண்டியது அதிர்ச்சியை அளித்தது.
இந்த நிலையில் எதிர்பாராத விதமாக இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 544 குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 39,656 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ. 4,957 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல வெள்ளி ஒரு கிராம் 73.50 ரூபாய்க்கு ஒரு கிலோ வெள்ளி 73,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெகு நாட்களுக்கு பிறகு தங்கம் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.