அதிரடியாக விலை குறைந்த ஆபரணத் தங்கம் – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக ஆபரணத் தங்கத்தின் விலை சரிவை கண்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய (செப்டம்பர் 18) விற்பனையில் சவரனுக்கு ரூ.16 வரை விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய விற்பனை
பொதுவாக சுபமுகூர்த்த நாட்கள், பண்டிகை நாட்களில் ஆபரணத் தங்கத்தின் விற்பனையானது அதிகமாக காணப்படுவது வழக்கம். அந்த நாட்களில் தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்து விற்பனை செய்யப்படும். ஆனால் கொரோனா 2 ஆம் அலைக்கு மத்தியில் மீண்டுமாக துவங்கியுள்ள தங்க நகைகளின் விற்பனை விலையானது தொடர்ச்சியாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அது போல இந்த காலத்தில் சுபகாரியங்கள் செய்பவர்களுக்கு தங்க நகைகளின் விலை சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செப்.20ம் தேதி முதல் கிரிவலம் வர தடை விதிப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
வழக்கமாக ஒவ்வொரு நாளும் ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்த தங்கத்தின் விலையானது, தற்போது இரண்டாவது வாரமாக சரிவை கண்டுள்ளது. குறிப்பாக நேற்றைய (செப்டம்பர் 17) விற்பனையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.300 வரை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. ஒரு அதே போல இன்றும் (செப்டம்பர் 18) தங்கத்தின் விலை மீண்டுமாக சரிவை கண்டுள்ளது.
இந்தியாவில் எகிறும் கொரோனா – ஒரே நாளில் 35,662 பேருக்கு தொற்று! 281 பேர் உயிரிழப்பு!
அந்த வகையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து, பல மாதங்கள் கழித்து ஒரு சவரன் நகை ரூ.34,952க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.2 மட்டும் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,369க்கு விற்பனையாகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.70 வரை சரிந்து ரூ.64.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.