இந்தியாவில் எகிறும் கொரோனா – ஒரே நாளில் 35,662 பேருக்கு தொற்று! 281 பேர் உயிரிழப்பு!

0
இந்தியாவில் எகிறும் கொரோனா - ஒரே நாளில் 35,662 பேருக்கு தொற்று! 281 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் எகிறும் கொரோனா - ஒரே நாளில் 35,662 பேருக்கு தொற்று! 281 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் எகிறும் கொரோனா – ஒரே நாளில் 35,662 பேருக்கு தொற்று! 281 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35,662 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 281 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா நிலவரம்:

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,34,17,390 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது. அதன் பேரில் மாநில அரசுகள் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் 2,15,98,046 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? மாணவ, மாணவிகளுக்கு பரவும் கொரோனா!

இதுவரை நாட்டில் 79,42,87,699 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்கள் பின்விளைவுகள் இருப்பதாக கூறினார். இதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு தடுப்பூசி செலுத்திய பிறகு ஏற்படும் பின் விளைவுகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் தகவல் தெரிவித்தனர். இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்க தேவையான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 281 பேர் உயிரிழந்துள்ளனர்.

டிச.31 வரை கொரோனா மருந்துகளின் GST சலுகை நீட்டிப்பு – மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்புகள்!

இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,44,529 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 33,798 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 3,26,32,222 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 97.65% என்ற நிலையில் உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3,40,639 பேர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!