செப்.20ம் தேதி முதல் கிரிவலம் வர தடை விதிப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தின் சில பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிகம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
கிரிவலம்:
நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. அதன் காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மாநில வாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை என உருமாறி பரவி வருவதால் மூன்றாம் அலை பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நோய் தாக்கம் படிப்படியாக சற்று அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எகிறும் கொரோனா – ஒரே நாளில் 35,662 பேருக்கு தொற்று! 281 பேர் உயிரிழப்பு!
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கிவரும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதேபோல் பக்தர்கள் மாதந்தோறும் பௌர்ணமி நாள் அன்று மலையை சுற்றி கிரிவலம் வருவது சிறப்பாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா காலம் என்பதால் பொதுமக்கள் அதிகமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட அளவில் முடிவுகளை மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? மாணவ, மாணவிகளுக்கு பரவும் கொரோனா!
இந்நிலையில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதன் மூலம் கொரோனா பரவும் விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால் ஏப்ரல் மாதம் முதல் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்ல வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார். மேலும் வரும் செப்டம்பர் 20ம் தேதி 5:20 மணி முதல் 21ஆம் தேதி காலை 6 மணி வரை கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது.