சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் தொடர்ந்து ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. இவ்வாறு பண்டிகை நெருங்கும் நேரத்தில் தங்கத்தின் விலை அதிகரிப்பது நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்க விலை:
முன்பெல்லாம் ஆபரணங்கள் அணிந்து தங்களது அழகை அதிகரித்து காண்பித்துக்கொள்ள நினைப்பவர்கள் பெரும்பாலும் பெண்கள் தான். ஆனால் தற்போது ஆண்களும் பெண்களுக்கு நிகராக ஆபரணங்கள் அணிகின்றனர். அதிலும் குறிப்பாக தங்கத்தினால் செய்யப்பட்ட ஆபரணங்கள். இதனாலே தங்கத்தின் விலை அதிகரிக்கிறது என்றும் கூறலாம். பெண்கள் தங்களது அழகை மெருகேற்றும் விதமாக தங்க ஆபரணங்கள் அணிந்தனர். தற்போது அந்த காலம் போய் ஆண்கள், பெண்கள் தங்களது தரத்தை காண்பிப்பதற்காக தங்க நகைகளை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
TN TRB முதுநிலை ஆசிரியர் வயது வரம்பு நிர்ணயம் – தேர்ச்சி பெற்றாலும் பணியில் சேர முடியாத சூழல்!
அதுமட்டுமல்லாது தங்க ஆபரணங்களை பெரும்பாலான பெண்கள் மற்றும் ஆண்கள் விரும்பியும் அணிகின்றனர். இவ்வாறு அனைவரும் பல்வேறு காரணங்களுக்காக தங்க நகைகளை விரும்பி அதனை வாங்குகின்றனர். இதனாலே தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் 1 சவரன் 35,200 ரூபாய்க்கும், 1 கிராம் 4,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து 35,352 ரூபாய்க்கும், 1 கிராமுக்கு 19 ரூபாய் அதிகரித்து 4,419 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது .
தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மதிப்பீடு தேர்வு!
மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் 1 கிராம் வெள்ளி 65.80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நம்மில் சிலர் பண்டிகை காலங்களில் வழங்கப்படும் போனஸ் மூலமாக தங்க நகைகள் வாங்க வேண்டும் என்றும் எண்ணுவதுண்டு. அவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு இத்தகைய விலை அதிகரிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. மேலும் பண்டிகை காலங்கள் நெருங்குவதால் இன்னும் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அறிவுறுத்தப்படுகிறது.