இந்தியாவில் ஒரே நாளில் 18,132 பேருக்கு கொரோனா தொற்று – 193 பேர் பலி!
நாடு முழுவதும் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையை தொடர்ந்து மீண்டும் நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
கொரோனா நிலவரம்:
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் சில தளர்வுகளுடன் விதிக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் அலையை தொடர்ந்து தற்போது அதிகரித்து வரும் கொரோனா பரவலில் கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!
எனவே தற்போதைய நிலவரப்படி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பதிவாகிய தரவுகளின் அடிப்படையில் புதிதாக 18,132 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,39,71,607 ஆக உயர்ந்துள்ளது.
TN TRB முதுநிலை ஆசிரியர் வயது வரம்பு நிர்ணயம் – தேர்ச்சி பெற்றாலும் பணியில் சேர முடியாத சூழல்!
மேலும் 193 பேர் உயிரிழந்துள்ள நிலையில் நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 4,50,782 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 21,563 பேர் குணமடைந்துள்ள நிலையில், மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 3,32,93,478 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,27,347 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தரவுகள் கூறுகின்றன. இதுவரை இந்தியாவில் 95,19,84,373 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 46,57,679 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.