சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது. கிருஸ்துமஸ், புத்தாண்டு என்று அடுத்தடுத்து பண்டிகைகள் வரும் நிலையில் அதிகரிக்கும் நகை விலையால் நகைப்பிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
இந்தியாவில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட தொழில் சரிவால் மக்கள் அதிகளவு தங்கத்தில் முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா ஊரடங்கால் அனைத்து வியாபாரமும் முடங்கியதாலும் தங்கம் விலை அதிகரித்தது. இதனால் சாமானிய நகை வாங்குவதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்தனர். அதன் பிறகு கடந்த ஜூன் மாதம் முதல் கொரோனா பரவல் குறைய தொடங்கியதும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியது.
மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 48 நாட்கள் விடுமுறை!
இதனால் வியாபாரங்களும் நடைபெற தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் தினசரி தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனையானது. வழக்கமாக பண்டிகை காலங்களிலும், சுபமுகூர்த்த தினங்களில் தங்கம் விலை அதிகரிக்கும். அந்த வகையில் கடந்த மாதம் தீபாவளி பண்டிகை தினங்களில் நகை தொடர்ந்து அதிகரித்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு சவரன் 40,000 ரூபாயை எட்டியது. அதன் பிறகு சற்று குறையத் தொடங்கியது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு HRA உயர்வு? கணக்கீட்டு விவரங்கள் இதோ!
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 அதிகரித்து சவரன் ரூ.35,744-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.1 உயர்ந்து ரூ.4,4683 விற்பனையாகிறது. அதே போல சென்னையில் சில்லறை வர்க்கத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.65.30 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.