மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 48 நாட்கள் விடுமுறை!
மேற்கு வங்க மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு 2022ம் ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 11 விடுமுறைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால், அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
விடுமுறை:
ஒவ்வொரு ஆண்டும் வருடத்தின் கடைசி மாதமான டிசம்பரில் அடுத்த ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை தினங்கள் கால அட்டவணை வெளியிடப்படும். அதன்படி தற்போது டிசம்பர் மாதம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு மாநிலங்களாக அரசு விடுமுறை தினங்களை அறிவித்து வருகிறது. அதனை தொடர்ந்து அந்தந்த மாநில அரசு துறைகளும் தனியாக விடுமுறை பட்டியலை வெளிட்டு வருகின்றனர். மற்ற மாநிலங்களை தொடர்ந்து தற்போது மேற்கு வங்க மாநில அரசு ஊழியர்களுக்கான பொது விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு HRA உயர்வு? கணக்கீட்டு விவரங்கள் இதோ!
அதன்படி, 2022ம் ஆண்டில், 48 நாட்கள் அரசு ஊழியர்களுக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை பட்டியலில் 11 விடுமுறை தினங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால், அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த விடுமுறை பட்டியல் குறித்து பேசிய அம்மாநில அரசின் மூத்த அதிகாரி அரசு அறிவித்துள்ள ஊழியர்களுக்கான விடுமுறை பட்டியலில் குளறுபடிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மாநிலத்தில் வழக்கமாக சரஸ்வதி பூஜைக்கு அடுத்த நாள் தான் விடுமுறை அறிவிக்கப்படும்.
ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி – ATM பண பரிமாற்ற கட்டணம் அதிகரிப்பு!
ஆனால் 2022ம் ஆண்டில் ஞாயிற்றுக்கிழமை சரஸ்வதி பூஜை வருவதால், அதற்கு முந்தைய நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேற்கு வங்க அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்காமல் விடுமுறையை அறிவித்து எங்களை சமாதானப்படுத்த முயற்சிகிறது. மேலும் மத்திய அரசு ஊழியர்களை விட மேற்கு வங்க அரசு ஊழியர்கள் 30% குறைவான ஊதியம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.