தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு – மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர்க்கு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தி வருகிறது. அத்துடன் தற்போது மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியருக்கு ஒரு முக்கிய அறிவுரையை அரசு வழங்கியுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது. அதனால் கொரோனா வைரஸின் 3ம் அலை தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 6ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தற்போது ஜனவரி 31ம் தேதி வரை அரசு நீட்டித்துள்ளது. அத்துடன் வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 3.1 கோடி புதிய வேலைவாய்ப்புகள் – ஆய்வறிக்கை தகவல்!
மேலும் வருகிற ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 16ம் தேதியும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்நாளில் காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி, நகை கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், டாஸ்மாக் உள்ளிட்ட கடைகள் செயல்பட அனுமதி இல்லை. இந்நிலையில் ஏராளமானோர் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பது தெரிய வந்தது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றுகிறார்களா என்பதை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை ஐகோர்ட் அலுவலக தூய்மை பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – பிப்.4 கடைசி நாள்!
அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. இதையடுத்து சென்னையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையருக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மற்றும் தனிநபர் இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட அரசு அறிவிக்கும் அனைத்து வழிமுறைகளையும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.