நாடு முழுவதும் 3.1 கோடி புதிய வேலைவாய்ப்புகள் – ஆய்வறிக்கை தகவல்!
இந்தியாவில் 2021 செப்டம்பர் வரையிலான காலாண்டில் குறிப்பிட்ட 9 துறைகளில் மொத்த வேலைவாய்ப்பு 3.1 கோடியாக இருந்துள்ளதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் ஆய்வறிக்கை தகவலை வெளியிட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு:
இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் என்பதில் பெரும்பாலும் வேலைவாய்ப்பு என்பது பெரும் சவாலான ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்த நிலையிலும் தனியார் துறைகளில் மக்கள் வேலைவாய்ப்பை பெற்று பயனடைந்து வருகின்றனர். கடந்த 2020ம் ஆண்டு பரவி கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தடுப்பு பணியாக விதிக்கப்பட்ட ஊரடங்கினால் தொழில்கள் அனைத்தும் முடங்கியது. மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில் இருந்ததால் விற்பனை இன்றி பொருளாதாரம் பின்னடைவை நோக்கி சென்றது. பலரும் தங்களின் வேலைகளை இழந்து மாத வருமானமின்றி அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
சென்னை ஐகோர்ட் அலுவலக தூய்மை பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – பிப்.4 கடைசி நாள்!
இந்த நிலையில் அரசின் முயற்சியால் நோய்த்தொற்று பரவல் குறைய ஆரம்பித்ததும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மீண்டும் கடைகள் திறக்கப்பட்டு தொழில்கள் நடைபெற தொடங்கியது. இந்த சூழலில் அரசு மற்றும் திர்ஹனியர் துறைகள் மக்களின் வாழ்வாதாரம் கருதி வேலைவாய்ப்புகளை வழங்க முன் வந்துள்ளது. தற்போது இந்தியாவில் கடந்த வருட வேலைவாய்ப்பு ஆய்வறிக்கையை மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ளார். அதன்படி கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாத காலாண்டில் உற்பத்தி, கட்டுமானம், வர்த்தகம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், விருந்தோம்பல், தகவல் தொழில்நுட்பம், பிபிஓ உள்ளிட்ட 9 துறைகளில் மொத்த வேலைவாய்ப்பு 3.1 கோடியாக இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
வேலைவாய்ப்பு நிலவரம் முன்னேறி வருவதுடன் ஒட்டுமொத்த பெண் தொழிலாளர்களின் விகிதம் 32.1 ஆக இருக்கிறது. உற்பத்தி துறை 31% மும், கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை 10 சதவீதமும் பங்களித்துள்ளது. வேலைவாய்ப்புகளின் தேவை மற்றும் விநியோக நிலவரம் குறித்த ஆய்வுகள் இந்தியாவின் வேலைவாய்ப்பு தரவுகளில் உள்ள இடைவெளிகளை நிரப்ப உதவும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் தெரிவித்தார்.