சென்னை ஐகோர்ட் அலுவலக தூய்மை பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – பிப்.4 கடைசி நாள்!
தமிழகத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி வருகிறது. இந்த பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தூய்மை பணி வேலை:
தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. அவ்வாறு தளர்வுகள் அளிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்ட அலுவலகங்களை தூய்மைபடுத்தும் பணியை மேற்கொள்ள தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா, மீண்டும் ஊரடங்கு? முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!
இந்த அறிவிப்பானது மாநில உரிமையியல் வழக்குரைஞர் அவர்களால் செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்ட அலுவலர்களின் கட்டடத்தில், மாநில அரசு உரிமையியல் வழக்குரைஞர் அலுவலகம் மற்றும் கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் அலுவலகங்கள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடங்களில் தூய்மை பணி மேற்கொள்ளும் வகையில் தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழகத்தில் 3 நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
இந்த அலுவலக கட்டடங்களை பார்வையிட வரும் ஜன.21ம் தேதி வரை அலுவலக பணி நாட்களில் விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பங்களை வரும் ஜன.4ம் தேதிக்குள் கீழ்வரும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அனுப்ப வேண்டிய முகவரி மாநில அரசு உரிமையியல் வழக்கறிஞர், சட்ட அலுவலர்கள் கட்டிடம், உயர்நீதிமன்றம், சென்னை 600104. இது குறித்த கூடுதல் விபரங்கள் அறிய 044 2534 1024 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்