தமிழகத்தில் வேலை வாய்ப்பற்றவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் வேலை வாய்ப்பற்றவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் வேலை வாய்ப்பற்றவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் வேலை வாய்ப்பற்றவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழகத்தில் மாவட்ட அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் வேலை கிடைக்காத மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வீனீத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

உதவித்தொகை:

தமிழக அரசு பணிகளில் சேர வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மக்கள் பதிவு செய்து வருகின்றனர். மேலும் கல்வி தகுதிகளை அவ்வப்போது அப்டேட் செய்து வருகின்றனர். முன்பு வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டு வந்தது. தற்போது அரசு பணிகள் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்ப பட்டு வருவதால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் வேலை கிடைக்காமல் காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக பரவி வரும் கொரோனா பெருந்தொற்றின் காரணமாகவும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் வேலை கிடைக்காமல் தவிக்கும் படித்த இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு சலுகையாக அவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1 ஆண்டு முடிவடைந்திருந்தாலே போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேலும் தோல்வியடைந்தவர்களுக்கு மாதம் ரூ. 200 வழங்கப்படும். அதே போல 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 400 மற்றும் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்படும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப் யூசர்கள் கவனத்திற்கு – வந்திருக்கும் புதிய ஆபத்து.. உஷார் பயனர்களே!

Exams Daily Mobile App Download

மேலும் அதே போல மாற்றுத்திறனாளிகளுக்கு இத்திட்டத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் மற்றும் பெறாதவர்கள் இருவருக்குமே ரூ.600 மேலும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750 வழங்கப்படுகிறது. அடுத்ததாக பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டம் பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. தற்போது இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள் ஆன்லைனில் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வீனீத் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!