வாட்ஸ் அப் யூசர்கள் கவனத்திற்கு – வந்திருக்கும் புதிய ஆபத்து.. உஷார் பயனர்களே!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் போன்றே அனைத்து அம்சங்களும் கொண்ட ஜிபி வாட்ஸ் அப் என்ற செயலியும் புழக்கத்தில் உள்ளது. இதில் தரவுகள் திருடப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
GB வாட்ஸ் அப்:
உலகில் அதிக அளவிலான மக்கள் பயன்படுத்தும் நம்பக தன்மை கொண்ட செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. இந்த நிலையில் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிதாக்கும் வகையில் அவ்வப்போது புதிய அப்டேட்களையும் வாட்ஸ் அப் அறிமுகம் செய்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் வாட்ஸ் அப் கணக்கு தொடங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அண்மையில் வாட்ஸ் அப் குழுவின் சேர்க்கப்படும் நபர்களின் எண்ணிக்கை உயர்த்தபட்டது. முதலில் 256 நபர்களில் இருந்து 512 ஆக உயர்த்தப்பட்டது.
அதனை தொடர்ந்து வாட்ஸ் அப் குரூப்களில் அதிகபட்சமாக 1024 வரை இணையும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் IOS பீட்டா போன்ற வெர்சன்களில் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மெட்டா நிறுவனம் ஜிபி வாட்ஸ் அப் பயன்படுத்தும் இந்திய பயனர்களின் தரவுகள் திருடப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனை தொடர்ந்து ESET இணைய பாதுகாப்பு நிறுவனம் தற்போது ஜிபி வாட்ஸ் அப்பின் “CLONE WhatsAPP” ஆகியவற்றில் பயனர்களின் டேட்டா திருடப்படுவதாக தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்.28 முதல் காலவரையற்ற போராட்டம்? உயரவுள்ள அத்தியாவசிய பொருளின் விலை!
Exams Daily Mobile App Download
மேலும் மக்கள் பாதுகாப்பில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்வதாலும் அதனை உபயோகப்படுத்துவதாலும் பயனர்களின் அனுமதியின்றி அவர்களின் விவரங்கள் மற்றும் புகைப்படங்கள், உரையாடல்கள் போன்றவைகளை திருடப்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அனுமதியற்ற குளோனிங் வாட்ஸ் அப் செயலிகளை அந்த நிறுவனம் தடை செய்து வருகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்