தமிழகத்தில் ஓமைக்ரான் தொற்றை தடுக்க தீவிர கட்டுப்பாடுகள் – முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை!
தமிழகத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால் நோய் பரவலை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் வெளியிட்டுள்ளார்.
கட்டுப்பாடுகள் தீவிரம்:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று கடந்த சில மாதங்களாக குறையத்தொடங்கியது. இந்நிலையில் கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் உலகின் 34க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாக பரவி வருவதாக தகவல் வெளியானது. இவ்வாறாக பரவி வரும் ஓமைக்ரான் தொற்று இந்தியாவில் 10 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் கட்டுப்பாடுகள் சற்று தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஓர் அரிய வாய்ப்பு!
அந்த வகையில் நைஜீரியா நாட்டில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து அவரோடு தொடர்பில் இருந்த 7 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நலவாழ்வுதத்துறை செயளாலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தரமான பொருட்கள் விநியோகம்! அமைச்சர் அறிவுறுத்தல்!
இவ்வாறாக தமிழகத்தில் ஓமைக்ரான் தொற்று தீவிரமாவதால் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படுமா என்ற அச்சம் மக்களிடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் வரும் ஜன.3ம் தேதி முதல் 6 – 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சுழற்சி முறை இன்றி தினசரி வகுப்புகள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதனால் மேலும் இது குறித்து வரும் டிச.25ம் தேதி முதலமைச்சர் தலைமையில் நடத்தவுள்ள ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.