தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தரமான பொருட்கள் விநியோகம்! அமைச்சர் அறிவுறுத்தல்!
தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்களை தரமானதாக வழங்க முன்னரே அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இது தொடர்பான ஆய்வினை நடத்தி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை தெரிவித்துள்ளார்.
தரமான பொருட்கள்:
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சிக்கு வந்த பிறகு அரசின் அனைத்து துறைகளிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்கள் அனைத்தும் தகுதியான மக்களுக்கு சரியான நேரத்தில் சென்று சேரும் வகையில் பணிகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மக்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதையும் அரசு தன் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதில் அரசின் பல நலத்திட்டங்களை மக்களை சென்று சேரும் மிகப்பெரிய பணியை ரேஷன் கடைகள் வருகின்றது. இதனால் அது தொடர்பான பல புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு அவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு 2022 – ரூ.130 கோடிக்கு ஆவின் நெய்!
ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்படும் அரிசியை தயார்படுத்தும் ஆலைகள் முன்னதாக ஆய்வு செய்யப்பட்டு, அதிநவீன தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டு தரமான அரிசி வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்த பணிகளை மேற்பார்வையிடுவதற்காக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர்கள், தரக் கட்டுப்பாட்டு மேலாளர்கள், மாவட்ட வழங்கல் அதிகாரிகளுடன் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நுாலக வளாகத்தில் நேரடியாக ஆய்வு செய்தார். இந்த ஆய்விற்கு பிறகு அமைச்சர் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தரமான மற்றும் சரியான எடையில் பொருட்களை வழங்க வேண்டும்.
TCS நிறுவனத்தில் ரூ.4.2 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அப்படி தரம் குறைந்த அரசி மக்களுக்கு வழங்கப்பட்டால் அதனை ரேஷன் கடைகளுக்கு அனுப்பிய முதுநிலை மண்டல மேலாளர், தரக் கட்டுப்பாட்டு மேலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளிடம் பொருட்களை உடனடியாக பெற்று அவற்றை முறையாக பராமரித்து மக்களுக்கு வழங்க வேண்டும். எனவே பொருட்களின் தரத்தை கவனமாக கண்காணிக்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு அரிசி வழங்கும் ஆலைகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக அரிசி மூடைகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதன் பிறகு, திருவல்லிக்கேணி ஜாம்பஜாரில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் அங்கும் நேரில் சென்று ஆய்வு நடத்தி, மக்களுக்கு தரமான பொருட்களை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.