தமிழக தடகள வீராங்கனை தனலக்ஷ்மிக்கு தடை – ஊக்கமருந்து எதிரொலி?
இந்திய கிராண்ட் ப்ரீ தடகள பந்தயத்தில் வெற்றி பெற்ற தமிழக வீராங்கனை தனலட்சுமி ஊக்க மருந்து உட்கொண்டதை ஒத்துக்கொண்ட நிலையில் தனலட்சுமி அனைத்து வித போட்டிகளிலும் கலந்து கொள்ள மூன்று ஆண்டுகள் தடை விதிக்கபட்டுள்ளது.
தடகள வீராங்கனை:
தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம் குண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் 24 வயதான தனலட்சுமி. இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற இந்திய கிராண்ட் ப்ரீ தடகள போட்டியில் 200 மீட்டர் தூரத்தை 23.21 வினாடிகளில் கடந்து தேசிய சாதனை புரிந்தார். நட்சத்திர வீராங்கனை ஹீமா தாஸை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் சிறந்த வீராங்கனை என்ற பட்டத்தை பெற்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய பெடரேஷன் கோப்பை தொடரில் தனலட்சுமி 200 மீட்டர் தூரத்தை 23.26 நொடிகளில் கடந்து பி.டி. உஷாவின் 23 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் காமன்வெல்த் போட்டிகள் பர்மிங்காமில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற்று வருகிறது. காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவில் இருந்து மொத்தம் 19 பிரிவுகளில் இருந்து 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொள்வதாக இருந்தது. இந்த போட்டியில் கலந்து கொள்ள தமிழக வீராங்கனை தனலட்சுமி தயாராகி கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து கடந்த மே மாதம் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தால் தடை செய்யப்பட்ட மருந்தான அனபோலிக் என்ற ஊக்கமருந்து பயன்படுத்தியதாக தகவல் வெளியானது.
Infosys, TCS, Paytm போன்ற நிறுவனங்களில் தொடரும் Work From Home – அறிவிப்பு வெளியீடு!
இதன் காரணமாக காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்ள தயாராகிக்கொண்டிருந்த தமிழக வீராங்கனை தனலட்சுமி நீக்கப்பட்டுள்ளார். மேலும் அனைத்து விதமான போட்டிகளிலும் கலந்து கொள்ள 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்தவர்களுக்கு தடகள உண்மை தன்மை அமைப்பு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கும். ஆனால் ஊக்கமருந்து உட்கொண்டதை தனலட்சுமி ஒத்துக்கொண்டதாலும் மேலும் தடையை ஏற்றுக்கொண்டதாலும் அவர்கள் தடை 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டதுடன் அவர் பெற்ற பதக்கங்களும் திரும்ப பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.