Infosys, TCS, Paytm போன்ற நிறுவனங்களில் தொடரும் Work From Home – அறிவிப்பு வெளியீடு!
மீண்டும் நாடு முழுவதும் கொரோனா வீரியமெடுத்து கொண்டிருக்கும் வேளையில் Infosys, TCS, Paytm போன்ற நிறுவனங்களில் Work From Home முறையையே தொடரலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Work From Home:
நாடு முழுவதும் கொரோனா பரவல் மிகவும் வேகமாக பரவத் துவங்கிய போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற அனைத்து பெரிய பெரிய நிறுவனங்களும் வீட்டில் இருந்தே வேலைசெய்யும்படியான முறைக்கு மாற்றியது. இதற்கு பிறகு ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைய குறைய ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைத்து வந்தனர். அதாவது, ஆரம்பத்தில் மூத்த ஊழியர்கள் மட்டும் அலுவலகங்களுக்கு சென்று வேலை பார்த்து வந்தனர். அடுத்தகட்ட ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதற்குள் மீண்டும் கொரோனா பரவல் பரவத் தொடங்கிவிட்டது.
Exams Daily Mobile App Download
இந்தியாவில் மட்டுமே நாள் ஒன்றிற்கு 16,103 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர் மற்றும் ஒரே நாளில் 31 உயிரிழப்புகளும் நிகந்துள்ளது. இதனால், ஊழியர்களை மீண்டும் அலுவலகங்களுக்கு அழைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், Paytm நிறுவனம் தயாரிப்பு, தொழில்நுட்பம் மற்றும் வணிக சம்மந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் வீட்டில் இருந்தபடியே செய்யும்படி அறிவித்துள்ளது. இந்நிலையில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ் மற்றும் HCL போன்ற ஐடி நிறுவனங்களும் தற்போது ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் திட்டத்தையே ஊக்குவிக்கின்றன.
75வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பொதுமக்களுக்கு அனுமதி? அரசு முக்கிய அறிவிப்பு!அதாவது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இன்ஃபோசிஸ் மற்றும் HCL போன்ற நிறுவனங்கள் ஹைப்ரிட் மாடலைத் தொடர முடிவு செய்துள்ளனர். மேலும், இந்த ஐடி நிறுவனங்கள் 25X25 மாடலை வெளியிட போவதாகவும், ஐடி நிறுவன ஊழியர்களுக்கு இயக்க மண்டலங்கள் (OOZ) மற்றும் ஹாட் டெஸ்க்குகளை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த ஹைப்ரிட் வேலை மாதிரிக்கு அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய 25 சதவீத ஊழியர்களுக்கு மேல் தேவைப்படாது எனவும், அலுவலகத்தில் 25 சதவீதத்திற்கு மேல் நேரத்தை செலவிட வேண்டியதில்லை எனவும் அறிவித்துள்ளது.
I am working in computer center