தமிழகத்தில் ஆவின் பால் விலை அதிரடி உயர்வு – விற்பனை 5% குறைவு!!
தமிழகத்தில் ஆவின் பால் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆவின் பால் விற்பனை வழக்கத்தை விட 5% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதலான தகவல்களை பார்ப்போம்.
ஆவின் பால்
தமிழகத்தில் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் இடுபொருட்கள் விலையேற்றம், உற்பத்தி செலவினம் ஆகியவற்றின் காரணமாக பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி பசும் பால் கொள்முதல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.32 லிருந்து ரூ.35 ஆகவும், இதே போல் எருமை பால் லிட்டருக்கு ரூ.41 லிருந்து ரூ.44 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என அரசு அறிவிப்பை வெளியிட்டது.
Follow our Instagram for more Latest Updates
இந்த விலை உயர்வின் காரணமாக விற்பனை விலையும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்படுவதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது கொழுப்பு நிறைந்த ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் விலை அரை லிட்டருக்கு ரூ.24 இருந்து ரூ.30 ஆக விற்பனையாகிறது. இதே போல ஒரு லிட்டர் ஆவின் பால் பாக்கெட் ரூ.60 ஆக விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!
Exams Daily Mobile App Download
இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமன்படுத்தப்பட்ட பால் நீல நிற பால் பாக்கெட், நிலைப்படுத்தப்பட்ட பால் பச்சை நிற பால் பாக்கெட் ஆகியவற்றின் விலையில் எந்தவொரு மாற்றமின்றி விற்பனையாகிறது. இந்த நிலையில் ஆவின் பால் பாக்கெட்டின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை வழக்கத்தை விட 5% குறைந்துள்ளது.