தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தென்மேற்கு வங்க கடலில்‌ தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. அதனால் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்:

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான காரணத்தால் இன்று காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம்‌, திருவள்ளூர்‌, இராணிப்பேட்டை மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதே போல நாளை திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, இராணிப்பேட்டை மற்றும்‌ வேலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அதனை தொடர்ந்து நவ. 23, 24, 25ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையும் அநேக இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. மேலும் இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌.

ஆதார் அட்டை தாரர்களுக்கு ரூ. 4.78 லட்சம் நிதி அளிக்கும் மத்திய அரசு? PIB விளக்கம்!

Exams Daily Mobile App Download

மேலும் இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களும் ஆந்திர கடலோரப்பகுதிகள்‌ தமிழகம் மற்றும் புதுவை கடலோரப்பகுதிகள்‌, இலங்கை கடலோரப்பகுதிகள்‌, தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில் வீசும். அதனால் இந்த நாட்களில்‌ மீனவர்கள்‌ கடலுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!